by Staff Writer 26-09-2019 | 11:35 AM
Colombo (News 1st) நிலவும் மழையுடனான வானிலையால் டெங்குக் காய்ச்சல் அதிகரிக்கும் அபாயமுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது வௌ்ளம் வடிந்தோடும் நிலையில், நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்புப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இம் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியைக் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 10 வீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்புப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 48 500 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.