பதுளை மாவட்டத்திற்கு 140 மில்லியன் நிதி ஒதுக்கீடு

பதுளை மாவட்டத்திற்கு 140 மில்லியன் நிதி ஒதுக்கீடு

by Staff Writer 25-09-2019 | 11:13 AM
Colombo (News 1st) கிராமசக்தி வேலைத்திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்திற்காக சுமார் 140 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி பண்டாரவளை, ஹாலியெல, ஊவாபரணகம, ஹப்புத்தளை, வெலிமடை, பசறை உள்ளிட்ட 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படும் கிராமசக்தி வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட பணிப்பாளர் M.K. ரிவுசன் தெரிவித்துள்ளார். இதன் முதல் கட்டத்தின் கீழ் 45 சங்கங்களுக்கு தலா 20 மில்லியன் ரூபா வீதம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிதி, அடிப்படை வசதிகள், உற்பத்தித்திறன் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.