by Staff Writer 25-09-2019 | 8:04 PM
Colombo (News 1st) கொலன்னாவையிலுள்ள ஓடையொன்றில் குளிப்பதற்கு சென்ற 20 வயதான இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மழை நீர் நிரம்பியிருந்த ஓடையில் இளைஞர்கள் சிலர் நேற்று (24) மாலை வாழைத்தண்டுகளை பயன்படுத்தி நீந்துவதற்கு முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, ஒரு இளைஞர் நீரில் மூழ்கியதுடன் அவர் சுமார் 20 நிமிடங்களின் பின்னர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
தெமட்டகொடை ஶ்ரீ தர்மாராம வீதியைச் சேர்ந்த 20 வயதான மொஹமட் யூஆர் மன்சூர் எனும் இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.