காலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

காலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

by Staff Writer 25-09-2019 | 12:07 PM
Colombo (News 1st) காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 2 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக, தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார். பலத்த மழை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், மேல் மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஶ்ரீலால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.