கடற்படையில் மீண்டும் யோஷித ராஜபக்ஸ

கடற்படையில் மீண்டும் யோஷித ராஜபக்ஸ

by Staff Writer 25-09-2019 | 10:11 AM
Colombo (News 1st) யோஷித ராஜபக்ஸவுக்கு மீண்டும் கடற்படையின் லெப்டினன் பதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, யோஷித ராஜபக்ஸவை சேவையில் அமர்த்துவதற்கான ஆவணத்தில் கடற்படைத் தளபதி கையொப்பமிட்டுள்ளதாக, கடற்படைப் பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார். யோஷித ராஜபக்ஸவின் பதவிக் காலத்தை நிறைவுசெய்யாது, தொடர்ந்து அவரை லெப்டினன் பதவிக்கு நியமிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி முதல், அவர் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்.