ப்ளூமெண்டல் சங்கவின் விளக்கமறியல் நீடிப்பு

ப்ளூமெண்டல் சங்க உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 24-09-2019 | 5:00 PM
Colombo (News 1st) பாதாள உலகக்குழு தலைவரான ப்ளூமென்டல் சங்க உள்ளிட்ட 3 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா டி சில்வா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து சந்தேகநபர்களின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்ற கொலைச்சம்பவங்கள் மற்றும் அவற்றிற்கு உதவி புரிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் ப்ளூமென்டல் சங்கவிற்கு எதிராக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் 8 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வௌிநாட்டிற்கு சென்றிருந்த நிலையில், தனது சட்டத்தரணியூடாக கடந்த 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகிய ப்ளூமென்டல் சங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.