தபால் மூல வாக்களிப்பிற்கான திகதி அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான திகதி அறிவிப்பு

by Staff Writer 24-09-2019 | 1:08 PM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 மற்றும் 31ஆம் திகதிகளில் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, எல்பிட்டி பிரதேச சபைக்கான தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது.