அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தம் 

கவனயீர்ப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரச நிர்வாக உத்தியோகத்தர்கள்

by Staff Writer 24-09-2019 | 7:58 AM
Colombo (News 1st) சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் இன்று (24) கவனயீர்ப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை அரச நிர்வாக சேவைகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களம், ஓய்வூதியத் துறை, வாகனப் போக்குவரத்துத் துறை மற்றும் பிரதேச செயலகங்களின் நிர்வாக நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் இன்று கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.