நிறைவேற்று அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச உத்தியோகத்தர்களும் பணிப்பகிஷ்கரிப்பு

by Fazlullah Mubarak 23-09-2019 | 9:03 AM

Colombo (News 1st) சம்பளப் பிரச்சினையை முன்வைத்து இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச உத்தியோகத்தர்கள் அறிவித்துள்ளனர்.

நிறைவேற்று அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச உத்தியோகத்தர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்கக் குழுவின் ஏற்பாட்டாளர் உதேனி திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கடவுச்சீட்டு விநியோகித்தல், அடையாள அட்டை விநியோகித்தல் உள்ளிட்ட அனைத்து அரச சேவைகளும் இன்று இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது,. நாட்டிலுள்ள அனைத்து திணைக்களங்கள், அமைச்சுகள், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகள் அனைத்தும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட மாட்டாது என அரச சேவை தொழிற்சங்க குழுவின் ஏற்பாட்டாளர் உதேனி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.