நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

by Staff Writer 23-09-2019 | 2:38 PM
Colombo (News 1st) சப்ரகமுவ, தென், மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை 200 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வட மேல் மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், பலத்த மழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேகாலை, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.  

ஏனைய செய்திகள்