தில்ருக்‌ஷிக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரிக்கை

தில்ருக்‌ஷிக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் கோரிக்கை

by Staff Writer 23-09-2019 | 7:38 PM
Colombo (News 1st) Avant Garde வழக்கின் பிரதிவாதிகளான Avant Garde Maritime Services நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதியுடனான தொலைபேசி கலந்துரையாடல் ஊடாக, தொழில் தர்மத்தை சீர்குழைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்‌ஷி டயஸிற்கு எதிராக உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று (23) பொதுச்சேவை ஆணைக்குழுவிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கமைய, சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்கவிற்கு பதிலாக, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய ராஜரத்ன, தற்காலிகமாக சொலிசிட்டர் ஜெனரலாக சட்டமா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளார்.