கட்டளையை மீறிய வாகனம் மீது துப்பாக்கிச்சூடு

கட்டுவனவில் கட்டளையை மீறிய வாகனம் மீது துப்பாக்கிச் சூடு

by Fazlullah Mubarak 23-09-2019 | 9:22 AM

Colombo (News 1st) கட்டுவன, ஹோரெவல சந்தியில் கட்டளையை மீறி பயணித்த காரொன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

மாடொன்று திருடப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காரில் பயணித்த ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர். காணாமற்போன மாடு மாத்தறை பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டமை சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மீதெல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதான சந்தேகநபரே இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.