ஆனந்தசங்கரியின் சுதந்திரபுர காணி உறுதிப்பத்திரம் மாவட்ட செயலாளரிடம் கையளிப்பு

by Staff Writer 23-09-2019 | 8:36 PM
Colombo (News 1st) தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் V. ஆனந்தசங்கரி, முல்லைத்தீவு - சுதந்திரபுரத்திலுள்ள தமது காணியின் உறுதிப்பத்திரத்தை இன்று (23) மாவட்ட செயலாளரிடம் கையளித்துள்ளார். காணி இல்லாத மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காகவே அவர் தமது காணியை அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரனிடம் ஒப்படைத்துள்ளார். முல்லைத்தீவு - சுதந்திரபுரம் பகுதியில் உள்ள 20 ஏக்கர் காணியை பகிர்ந்தளிப்பதாக V. ஆனந்தசங்கரி, குறித்த காணியில் குடியேறியுள்ள மக்களுக்கு அண்மையில் உறுதியளித்திருந்தார். இதற்கமைவாகவே, இந்தக் காணிக்கான உறுதிப்பத்திரம் இன்று முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்