by Staff Writer 22-09-2019 | 7:33 AM
Colombo (News 1st) காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியம் மற்றும் புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 55 வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தென் கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் குறித்த கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மழையுடனான வானிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் சாத்தியமுள்ளதாக திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.