நில்வளா கங்கை நீர்மட்டம் அதிகரிப்பு

நில்வளா கங்கை நீர்மட்டம் அதிகரிப்பு: அவதானத்துடன் செயற்படுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

by Staff Writer 22-09-2019 | 11:10 AM
Colombo (News 1st) மழையுடனான வானிலையால் நில்வளா கங்கை பெருக்கெடுக்கும் நிலையை அண்மித்துள்ளது. இதனால், நில்வளா கங்கையின் ஊரவ மற்றும் பானதுகம பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கிங் கங்கையின் நீர்மட்டமும் தவலம பகுதியில் வௌ்ள மட்டத்தை எட்டியுள்ளது. எனவே, கங்கைகளின் இருபுறமும் வாழும் மக்கள், இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.