கையிருப்பிலுள்ள நெல்லை விநியோகிக்க அரசு தீர்மானம்

கையிருப்பிலுள்ள நெல்லை விநியோகிக்க அரசு தீர்மானம்

by Staff Writer 22-09-2019 | 7:03 AM
Colombo (News 1st) அரசாங்கத்திடமுள்ள நெல்லை சந்தையில் விநியோகிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவுக்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நெல் விநியோக சபையிடம் 48,000 மெற்றிக் தொன் நெல் கையிருப்பில் உள்ளது. இதனை எதிர்வரும் பெரும்போகத்தின் அறுவடையை சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் வரை கட்டம் கட்டமாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.