பேஸ்புக் ஊடாக 24,40,000 ரூபா மோசடி: இருவர் கைது

பேஸ்புக் ஊடாக 24,40,000 ரூபா மோசடி: இருவர் கைது

by Staff Writer 21-09-2019 | 5:24 PM
Colombo (News 1st) பேஸ்புக் ஊடாக ஒருவரை அச்சுறுத்தி பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மிரிஹான பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்கள் இருவரும் நபரொருவரை அச்சுறுத்தி பல்வேறு சந்தர்ப்பங்களில் 24,40,000 ரூபாவை பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 28 வயதான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரும் இரத்தினபுரியைச் சேர்ந்த பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தின் தென் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளினூடாக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கல்கிசை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.