மீனவர்கள் மூவரைக் காணவில்லை

சாய்ந்தமருதில் கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் மூவரைக் காணவில்லை

by Staff Writer 21-09-2019 | 3:43 PM
Colombo (News 1st) சாய்ந்தமருது - மாளிகைக்காடுதுறை பகுதியில் கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் காணாமற்போயுள்ளனர். கடந்த 17 ஆம் திகதி கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் இவர்கள் காணாமற்போயுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். சாய்ந்தமருதினை சேர்ந்த I.M.ஹாரிஸ், S.S.M.ஜூனைதீன் மற்றும் காரைத்தீவினை சேர்ந்த S.ஶ்ரீகிருஷ்ணன் ஆகிய மீனவர்களே காணாமற்போயுள்ளனர். மீனவர்களின் தொலைபேசிகள் செயலிழந்துள்ளதுடன், தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேடுதல் நடவடிக்கைகளில் சக மீனவர்களின் நான்கு படகுகள் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.