இலஞ்சம் பெற்றுக்கொண்ட யாழ்ப்பாண பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்

by Staff Writer 21-09-2019 | 3:25 PM
Colombo (News 1st) இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் அதிபர் எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் நேற்றிரவு யாழ். நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். தரம் 7-க்கு மாணவர் ஒருவரை சேர்த்துக்கொள்வதற்காக ஒரு இலட்சம் ரூபா பணத்தை அதிபர் கோரியதுடன், அதில் 50,000 ரூபா பணத்தை அதிபர் ஏற்கனவே பெற்றுக்கொண்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது. மிகுதி 50,000 ரூபா இலஞ்சப் பணத்தை நேற்று (20) பெற்றுக்கொண்டபோதே அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்