by Staff Writer 20-09-2019 | 3:44 PM
Colombo (News 1st) ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 5 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பிரிவு ஒழிப்பு பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், சந்தேகநபர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஹெரோயின் கடத்தியமை, தம்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளின் பிரகாரம் குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.