by Staff Writer 20-09-2019 | 3:53 PM
Colombo (News 1st) வத்தளை - ஹேக்கித்த பகுதியிலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின் ஒழுக்கினால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனால் மூன்று மாடிகளைக் கொண்ட குறித்த வர்த்தக நிலையம், முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.
எவ்வாறாயினும் எவருக்கும் காயமேற்படவில்லை.
4 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த தீயினால் இன்று காலை கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.