by Staff Writer 19-09-2019 | 1:33 PM
Colombo (News 1st) மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள், பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் ஆகியோரை நாளை (20) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகைதருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தௌிவூட்டுவதற்காக இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரசிக பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய நாளை காலை 10 மணிக்கு கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது.
2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கு அமைய எதிர்வரும் நவம்பம் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடாத்தப்படவுள்ளது.
அதற்கமைய, இந்தத் தடவை ஜனாதிபதித் தேர்தலுக்கு 1 59 92 096 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.