தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துதல் இன்று முதல்

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல்

by Staff Writer 19-09-2019 | 6:55 AM
Colombo (News 1st) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இன்று (19) முதல் கட்டுப்பணம் செலுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. இதன்பிரகாரம், இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் 7ஆம் திகதி வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வௌியிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 7 ஆம் திகதி காலை 9 மணி முதல் 11 மணி வரையான காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்