கஞ்சிப்பானை இம்ரான் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் ஆஜர்

by Staff Writer 19-09-2019 | 12:22 PM
Colombo (News 1st) பாதாள உலகக் குழுத் தலைவரான கஞ்சிப்பானை இம்ரான் என்றழைக்கப்படும் மொஹமட் நஜிட் மொஹமட் இம்ரான், அரச இரசாயன பகுப்பாய்வாளர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய, குரல்பதிவின் மாதிரியை பெற்றுக் கொள்வதற்காக கஞ்சிப்பானை இம்ரான் அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். கஞ்சிப்பானை இம்ரான் வௌிநாட்டில் தங்கியிருந்தபோது தொலைபேசியூடாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்குத் தேவையான சாட்சியத்தை பெறுவதற்காகவே கஞ்சிப்பானை இம்ரானின் குரல்பதிவின் மாதிரி பெறப்படுகிறது.