ஐஸ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது

ஐஸ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது

by Staff Writer 19-09-2019 | 10:55 AM
Colombo (News 1st) ஐஸ் போதைப்பொருளுடன் நாட்டிற்கு வருகைதந்த இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது பயணப் பொதியில் மிகசூட்சுமமான முறையில் மறைத்துவைத்து ஐஸ் போதைப்பொருளை சந்தேகநபர் கொண்டுவந்துள்ளதாக பதில் சுங்கப் பேச்சாளர் லால் வீரகோன் தெரிவித்துள்ளார். சந்தேகநபரிடமிருந்து 864 கிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருளின் பெறுமதி 86 42 150 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 29 வயதான இந்தியப் பிரஜையிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.