உலக தபால் தினத்தை முன்னிட்டு முத்திரைக் கண்காட்சி

உலக தபால் தினத்தை முன்னிட்டு முத்திரைக் கண்காட்சி

by Staff Writer 19-09-2019 | 1:45 PM
Colombo (News 1st) 145 ஆவது உலக தபால் தினத்தை முன்னிட்டு தபால் திணைக்களத்தின் முத்திரைப் பிரிவினால் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 முதல் 9ஆம் திகதி வரை இந்தக் கண்காட்சியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த கண்காட்சியுடன் இணைந்ததாக போட்டியொன்று நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, முத்திரைப் பிரிவு பணிப்பாளர் ஹான்ன குமார மீகம தெரிவித்துள்ளார். கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்காக, முத்திரை சேகரிப்பாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதி இதற்கான இறுதித் திகதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.