by Staff Writer 19-09-2019 | 3:42 PM
Colombo (News 1st) சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் சட்டப்படி வேலை போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
ரயில் விபத்துக்களின் போது ஏற்படக்கூடிய நட்டத்தை ரயில் ஓட்டுநர் மற்றும் ஊழியர்களிடம் அறவிடுவதற்கு ரயில்வே பொது முகாமையாளர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் , ரயில் கட்டுப்பாட்டாளர்கள், ஓட்டுநர்கள், நிலைய பொறுப்பதிகாரிகள், கண்காணிப்பு முகாமையாளர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக ரயில் என்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட குறிப்பிட்டார்.