தென்மேற்குப் பகுதியில் தொடர்ந்தும் மழை

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தொடர்ந்தும் மழை

by Staff Writer 18-09-2019 | 7:22 AM
Colombo (News 1st) நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்ப்டடுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் நிலவுமாயின் உடனடியாக அந்த பகுதியிலிருந்து வௌியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.