அம்பாறையில் கைதான 14 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

தாக்குதல்தாரிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதான 14 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

by Staff Writer 18-09-2019 | 3:36 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய குழுவிற்கு உதவிய குற்றச்சாட்டில் அம்பாறையில் கைது செய்யப்பட்ட 14 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் கல்முனை நீதவான் I.N.ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் சம்மாந்துறை பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகள் யாவும் நீதவானின் பிரத்தியேக அறையில் மேற்கொள்ளப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். சந்தேகநபர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்