ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

by Staff Writer 18-09-2019 | 6:27 PM
Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. அடுத்த மாதம் 7 ஆம் திகதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வௌியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.