சுற்றுலாத்துறை ஊக்குவிப்பிற்கு 150 கோடி முதலீடு

சுற்றுலாத்துறை ஊக்குவிப்பிற்கு 150 கோடி முதலீடு

by Staff Writer 18-09-2019 | 1:49 PM
Colombo (News 1st) சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கென 150 கோடி ரூபாவை முதலீடு செய்வதற்கு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை தயாராகியுள்ளது. ஐரோப்பிய சந்தை தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அதிகாரசபை அறிவித்துள்ளது. இதேவேளை, இலவச விசா முறை நடைமுறையிலுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கையின் சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபையின் தலைவர் கிஷூ கோமஸ் தெரிவித்துள்ளார்.