சவுதி அரேபியா மீதான தாக்குதலில் புதிய திருப்பம்

சவுதி அரேபியா மீதான தாக்குதலில் புதிய திருப்பம்

by Staff Writer 18-09-2019 | 9:00 AM
Colombo (News 1st) ஈரானின் தெற்குப் பகுதியிலிருந்த சவுதி அரேபியாவின் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது, தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானின் எந்த பகுதியிலிருந்து ஆளில்லா விமான தாக்குதல் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தொடர்பிலும் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், தம்மீதான அனைத்து குற்றச்சாட்டுக்ளுக்கும் ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதல்களையடுத்து, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மசகு எண்ணெய்யின் விலை 20 வீதம் வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.