களனி மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்

களனி மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்

by Staff Writer 18-09-2019 | 8:36 AM
Colombo (News 1st) அவிசாவளை மற்றும் புவக்பிட்டிய பகுதிகளுக்கு இடையில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக, களனி மார்க்கத்திலான ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்படவிருந்த 3 ரயில்களும் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ரயிலை தண்டவாளத்தில் நிறுத்துவதற்காக விசேட குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.