நிஸ்ஸங்க சேனாதிபதி இன்றி வழக்கு விசாரணை

நிஸ்ஸங்க சேனாதிபதி இன்றி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல தயார்

by Staff Writer 17-09-2019 | 4:42 PM
Colombo (News 1st) Avant Garde Maritime Services நிறுவனத்திற்கு சொந்தமான ஆயுதக்களஞ்சியசாலையை நடத்திச்செல்ல அனுமதி வழங்கியமை தொடர்பில் 355 இலட்சம் ரூபாவிற்கும் அதிகத்தொகை நிதி இலஞ்சமாக வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான அவன்ற் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதி இன்றி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தயாராகவுள்ளதாக சட்ட மா அதிபர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை அடுத்த மாதம் 22 ஆம் திகதி முன்னெடுக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் இன்று உத்தரவிட்டுள்ளார். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பாலித பெர்னாண்டோவின் பிணையாளர்கள் நால்வருக்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டுத் தடையை நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.