by Staff Writer 17-09-2019 | 4:13 PM
Colombo (News 1st) தெமட்டகொட - ஆராமய வீதியிலுள்ள குடியிருப்பு தொகுதியில் தீ பரவியுள்ளது.
5 வீடுகளைக் கொண்ட மாடிக்கட்டடம் ஒன்றிலேயே தீ பரவியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.