தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தை

by Staff Writer 17-09-2019 | 9:06 PM
Colombo (News 1st) பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று பிற்பகல் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கலந்து கொண்டார்.