கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

by Staff Writer 17-09-2019 | 7:53 AM
Colombo (News 1st) அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (17) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவுசெய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளுக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள கலந்துரையாடலில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோன்று, மாவட்ட செயலாளர்களுடனான கலந்துரையாடலை எதிர்வரும் 20 ஆம் திகதி நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். இதனிடையே, எதிர்வரும் 14 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ​இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அதிகாரம் நேற்று முன்தினம் முதல் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வசமாகியமை குறிப்பிடத்தக்கது.