தொடர்ந்தும் மழையுடனான வானிலை

தொடர்ந்தும் மழையுடனான வானிலை

by Staff Writer 15-09-2019 | 1:15 PM
Colombo (News 1st) சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 87 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. காலி அங்குணகொலபெலஸ்ஸ பகுதியில் 60 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.