by Staff Writer 15-09-2019 | 10:32 AM
Colombo (News 1st) தெமட்டகொட - மஹவில ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இரு பெண்கள் காயமடைந்துள்ளனர்.
இன்று (15) காலை 8.45 மணியளவில் இந்த வெடிச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 65 மற்றும் 64 வயதான இரண்டு பெண்களே காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.