வௌ்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு பெண் பலி

வௌ்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு பெண் பலி

by Staff Writer 14-09-2019 | 4:12 PM
Colombo (News 1st) கல்கிசையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு பயணித்த ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வௌ்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். அரலகங்வில பகுதியை சேர்ந்த 29 வயதான பெண் ஒருவரே ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்