விவசாய கண்காட்சி இம்முறை யாழ்ப்பாணத்தில்

விவசாய கண்காட்சி இம்முறை யாழ்ப்பாணத்தில்

by Staff Writer 14-09-2019 | 7:19 PM
Colombo (News 1st) வட மாகாண விவசாய திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவசாய கண்காட்சி இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இம்மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இந்த விவசாய கண்காட்சி நடைபெறவுள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு, நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி எனும் தொனிப்பொருளில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.