ஹட்டனில் 81 வயதான பெண் கொலை: பேத்தியின் வாக்குமூலத்திற்கமைய குடும்பத்தார் மூவர் கைது

by Staff Writer 13-09-2019 | 4:03 PM
Colombo (News 1st) ஹட்டன் - ரொசல்ல பகுதியில் 81 வயதான பெண் ஒருவர் கொலையுண்டமை தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த பெண்ணின் மகன், மருமகள் மற்றும் பேரன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். உயிரிழந்த பெண்ணின் பேத்தியான 8 வயது சிறுமி வழங்கிய வாக்குமூலத்திற்கமைய குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது தந்தையும் தாயும் சகோதரனும் இணைந்து பாட்டியை கூரான ஆயுதத்தால் தாக்கியதன் பின்னர் உரையொன்றுக்குள் போட்டு, எடுத்துச்சென்றதாக சிறுமி வாக்குமூலம் வழங்கியுள்ளார். உயிரிழந்த பெண்ணின் சடலம் வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டக்கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன. 81 வயதான ஆர்.வள்ளியம்மா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.