மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

கனிமொழி இலங்கை வருகை: மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

by Staff Writer 13-09-2019 | 6:53 PM
Colombo (News 1st) திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நேற்று (12) கடற்றொழில் பிரதியமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சரை சந்தித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார். இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்தை இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த போதே கனிமொழி இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.