பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

by Staff Writer 12-09-2019 | 6:54 PM
Colombo (News 1st) பல்கலைக்கழக விடுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் நிழற்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான மாணவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் அந்தோனிப்பிள்ளை பீட்டர்போல் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார். நாட்டில் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டிருந்த போது, அனைத்து பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் நிழற்படங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மே மாதம் 16 ஆம் திகதி பிணை வழங்கப்பட்டது.