நாட்டின் பல பாகங்களிலும் பலத்த மழை

நாட்டின் பல பாகங்களிலும் பலத்த மழை

by Staff Writer 12-09-2019 | 7:53 AM
Colombo (News 1st) கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன், மேல், சப்ரகமுவ, மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையிலான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, மின்னல் தாக்கங்கள் மற்றும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.