by Staff Writer 12-09-2019 | 9:53 AM
Colombo (News 1st) 12 நாடுகளை கேந்திரமாகக் கொண்டு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
சரிவை எதிர்நோக்கியுள்ள சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டம் சீனா, ஜப்பான், பிரித்தானியா, இத்தாலி , ஜேர்மன், இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளில் செயற்படுத்தப்படவுள்ளன.
இதற்காக 1.3 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.