கட்சி செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு

கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு

by Staff Writer 12-09-2019 | 12:09 PM
Colombo (News 1st) அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் நிரந்தர பிரதிநிதிகளை எதிர்வரும் 17ஆம் திகதி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள கலந்துரையாடலில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.