64 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதான 64 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

by Staff Writer 12-09-2019 | 5:48 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிவான் ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் காத்தான்குடியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் 64 பேரும் கைது செய்யப்பட்டனர். நுவரெலியாவில் ஆயுதப்பயிற்சி பெற்றமை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 4 பெண்களும் அடங்குகின்றனர்.