பாண் விலை 2 ரூபாவால் குறைப்பு

பாண் விலை 2 ரூபாவால் குறைப்பு

பாண் விலை 2 ரூபாவால் குறைப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2019 | 6:45 pm

Colombo (News 1st) 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் 2 ரூபாவால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பழைய விலையில் கோதுமை மாவை விற்பனை செய்வதற்கு நிறுவனங்கள் இணங்கியுள்ளமையால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்தார்.

இதற்கமைய, பேக்கரி உற்பத்திகளின் விலைகளையும் குறைப்பதற்கு இன்று மாலை தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு கிலோ கோதுமை மா கடந்த 6 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்புகள் வௌிவந்த நிலையில், இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்