மன்னாரில் கேரளக்கஞ்சாவுடன் எழுவர் கைது

மன்னாரில் கேரளக்கஞ்சாவுடன் எழுவர் கைது

by Bella Dalima 11-09-2019 | 5:10 PM
Colombo (News 1st) மன்னார் - எழுத்தூர் பகுதியில் கேரளக்கஞ்சாவுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 100 கிலோகிராம் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். மன்னாரை சேர்ந்த 20 தொடக்கம் 29 வயதிற்கு இடைப்பட்ட 7 சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கேரளக்கஞ்சாவையும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.